3.8 கி.மீ தூரத்திலிருந்து.. ஒரே டுமீல்.. அதிர வைத்த உக்ரைன் ராணுவ வீரர்.. ரெக்கார்ட் பிரேக்!

Nov 21, 2023,05:06 PM IST

கீவ்:  உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வெகு தூரத்திலிருந்து அதாவது 3.8  கிலோமீட்டர் தொலைவிலிருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. உலக சாதனையாக இதை உக்ரைன் தரப்பு பெருமையாக சொல்லி வருகிறது.


இதுதொடர்பான செய்தி ஒன்றை நியூஸ்வீக் வெளியிட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், (உக்ரைன் செக்யூரிட்டி சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்) ரஷ்ய வீரர்களின் நடமாட்டத்தைக்  கண்டறிந்துள்ளார். ஊடுறுவி வந்த அவர்களை கிட்டத்தட்ட 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அவர் தனது ஸ்னைப்பார் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டார். இதில் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டனர்.


மிக மிக தூரத்திலிருந்து குறி பார்த்து சுட்டு ஒருவரை வீழ்த்தியிருப்பது சர்வதேச போர்க்களத்தில் இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது கின்னஸ் சாதனைக்கும் தகுதியானது என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.




உக்ரைன் வீரர் துப்பாக்கியால் சுட்டதும் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேகமாக தரையில் படுத்து மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்க முயல்வதும் ஸ்னைப்பரில் தெளிவாக பதிவாகியுள்ளது.


கனடா படையின் முந்தைய சாதனை


இதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்க கூட்டுப் படையில் இடம் பெற்றிருந்த கனடா சிறப்புப் படைப் பிரிவு வீரர் ஒருவர் 3.54 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை உக்ரைன் வீரர் மிஞ்சியுள்ளார்.


அதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர் கிரேக் ஹாரிசன் என்பவர் 2.48 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டு தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளியை சுட்டுக் கொன்றார் என்பது நினைவிருக்கலாம்.


உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்து விட்டன. விடாமல் இரு தரப்பும் போர் புரிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்