காசியில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்.. விமானத்தில் அழைத்து வர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Feb 20, 2025,10:26 AM IST

சென்னை: வாரணாசி  ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்ததால், முன்பதிவு செய்து இருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல்  தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விமான மூலம் சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 


வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 16, 17, 18, ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துவிட்டு இருபதாம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவிரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், வாரணாசி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஏசி பெட்டிகளையும் கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். 




இதனால், முன்பதிவு செய்து இருந்தும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரணாசி ரயில் நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.இதனைதொடர்ந்து தமிழக அரசு எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமான மூலம் சென்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்