திருவள்ளூர் அருகே .. தண்டவாளத்தைக் கடந்தபோது.. மின்சார ரயில் மோதி 3 பேர் பலி!

Nov 19, 2023,12:27 PM IST
சென்னை: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த 3 பேர் மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

கொல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர். வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் அதிகம். பலமுறை இப்பகுதியில் விபத்து ஏற்பட்டும் கூட மக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. உயிரைப் பணயம் வைத்து பலரும் தண்டவாளத்தைக் கடப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த அவலத்தைப் போக்குவதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது அது பாதியிலேயே நிற்கிறது. இதனால் மக்களின் அவலமும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் இன்று ஒரு விபரீதம் நடந்துள்ளது.




இன்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியை கடந்தபோது 3 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 2 பேர் பெண்கள் ஆவர். 3 பேரின் உடல்களும் மிக மோசமாக சிதறிப் போய் விட்டன. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சிதிலமடைந்து விட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடல் பாகங்களைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரயில் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்