சென்னை: இந்துத்துவ சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழப்பாடி ராமமூர்த்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே இருக்க கூடாது என மிக தீவிரமாக களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவருடைய பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.அவரின் குரல் ஏழைகளின் குரலாக இருந்தது. எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். அவருக்கு மலரஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது.
பரந்தூர், ஏகனாபுரம் ஸ்ரீபெரும்புதூரான எனது தொகுதிக்குள் வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கின்றேன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன இந்த திட்டம் அப்படியே தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏவாக நானும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். அங்கு வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது. அது தான் அனைவருடைய விருப்பமும். பல தலைமுறைகளாக வாழ்கின்ற அந்த மக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் பேசியதின் படி, இந்துத்துவ மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்று முன்னெடுத்தால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது நல்லது. இது அவருக்கும் அவரின் கொள்கை கோட்பாடிற்கும் எல்லாவற்றிற்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு பிரஜையாக சொல்கிறேன்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சிற்கு திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல
மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!
சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக
Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!
Ratha Saptami: ரதசப்தமி அன்று எருக்க இலை குளியல் ஏன்? எதற்காக ?
{{comments.comment}}