செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தவெகவில் செயலாளர் பதவியா?.. நிர்வாகிகள் போர்க்கொடி

Feb 07, 2025,04:26 PM IST

சென்னை: செயின் பறிப்பு செய்தவருக்கும் போலீசை அடித்தவருக்குமா தவெகவில் செயலாளர் பதவி என கேட்டு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. 


2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்த  நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. சமீபத்தில் தான்  மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். கிட்டத்தட்ட 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அளவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 




இந்நிலையில், தவெக தரப்பில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீது அக்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது கன்னியாகுமரி மாவட்.டத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக சபின் நியமிக்கப்பட்டுள்ளார். சபின் மீது தவெக நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


மேற்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சபின் மீது ஒரு செயின் பறிப்பு வழக்கும், காவல்துறையினரை அடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.  அதே போல் சுயசாதிப்பற்று கொண்டவர் சபின். இவர் கன்னியாகுமரி மாவட்ட தவெகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது என்ற தவெக தலைவர் விஜய் அறிவிப்பு என்ன ஆனது? தவெக தலைவர் விஜய் சபின் மீது வைத்துள்ள நம்பிக்கை, கட்சியை அழிவு பாதையில் பயணிக்க வைக்கும். மாவட்டத்தில் கட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று எழுதப்பட்ட கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பியுள்ளார் மாவட்ட நிர்வாகி சிவா. அத்துடன் சபின் மீதான எஃப்ஐஆர் நகல்களையும் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளாராம்.


இந்தப் பஞ்சாயத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்