சென்னை: இது காட்டுமிராண்டி தனமானது. கைது செய்யும் அளவிற்கு மகாவிஷ்ணு பெரிய தவறு செய்யவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மகாவிஷ்ணு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மகாவிஷ்ணு மீது போலீசில் புகார்கள் குவிந்ததால், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் அழைத்து வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ். மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், திமுக எப்பவுமே இரட்டை வேடம் போடுகின்ற கட்சி. திருக்குறள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பொதுமறையான நூல். ஆத்திகர்கள் நாத்திகர்கள் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல். அந்த திருக்குறளிலே முற் பிறவி, மறு பிறவி, 7 பிறவி என சொல்லப்பட்டிருக்கு.
மகாவிஷ்ணு மாற்று திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது அவருடைய அனுபவமின்மையைக் காட்டுகிறது. மற்றபடி அவரை கைது செய்வது தான் தீர்மானம் என்பது கிடையாது. அவரை அழைத்து காவல்துறையினர் இது போன்று மாற்றுதிறனாளிகளின் மனதை புண்படுத்தும் படி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.
நீதிமன்றத்திலே சில நீதிமன்ற அவமதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கைது செய்யும் அளவிற்கு அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை. அவர் மாற்றுத்திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தேவையற்ற நடவடிக்கை. இது காட்டு மிராண்டித்தனமாக இருக்கிறது. அவரை பள்ளிகளில் அழைத்து பேச கூறியதே தவறு என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}