மீண்டும் பாஜகவில் திருச்சி சூர்யா.. சஸ்பென்ஷனை ரத்து செய்தார் அண்ணாமலை!

Nov 02, 2023,04:28 PM IST

சென்னை: திருச்சி சூர்யா சிவா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. 


திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர் திமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இணைந்தது முதல் அதிரடியாக செயல்பட்டு வந்தார். டிவி விவாதங்களில் பங்கேற்பது, பேட்டிகள் தருவது, சமூக வலைதளங்களில் களமாடுவது என தீவிரமாக செயல்பட்டு வந்தார்.


இந்த நிலையில்,  கடந்த ஆண்டு 24ம் தேதி இவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாதத்திற்கு நீக்கி வைத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்சிக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.




இந்த நிலையில் அவர் அதிமுகவுக்கு போகப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில் தற்போது திடீரென சிவாவின் சஸ்பெண்ட் நடவடிக்கையை பாஜக தலைவர் அண்ணாமலை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரு. சூர்யாசிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.


இதன் மூலம் சூர்யா சிவா, அதிமுகவுக்குப் போவது தடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்