திருச்சி: திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு எஸ்பி வருண்குமார் தான் காரணம் என்றும், குறிப்பட்ட இனத்தவர்களை வருண் குமாருக்கு பிடிக்கது என்றும் குற்றம்சாட்டியிருந்தார் சீமான்.
இந்த நிலையில், வருண்குமார் மற்றும் அவரது வீட்டு பெண்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், எஸ் பி வருண்குமாரும் சமூக வலைதளங்களில் பதில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், திருச்சி போலீஸ் நிலையத்தில் சீமான் உள்ளிட்டோர் மீது வருண் குமார் புகார் செய்திருந்தார்.
வருண் குமார் அளித்த புகாரின் பேரில், சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சியை சேர்ந்து கண்ணன் மற்றும் திருப்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}