திருச்சி: அவதூறு வழக்கில் 6 ஆவணங்களை சீமானிடம் ஒப்படைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன்மீதும் தன்னுடைய குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் ஆஜராகவில்லை. டிஐஜி வருண்குமார் மட்டும் ஆஜரானார்.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நாளை சீமான் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீமானை இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இல்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு சீமான் ஆஜரானார். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு டிஐஜி வருண்குமார் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று சீமான் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதி, அரை மணி நேரத்திற்குள் சீமான் தரப்பிடம் 6 ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். ஆதாரங்களை பெற்ற பிறகு சீமான் கையெழுத்திட்டு விட்டு செல்லவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையையும் ஒத்திவைத்தார்.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}