ஜன.10 டிக்கெட் காலி.. மின்னல் வேகத்தில் முடிந்த பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு.. பயணிகள் ஏமாற்றம்

Sep 12, 2024,05:11 PM IST

சென்னை : பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிகள் துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே முடிந்து போனதால் வரிசையில் ஆவலாக காத்திருந்த பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 


பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வைக்கும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.




இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கலும் வருகிறது. ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை போகி பண்டிகை என்பதால், அதற்கு முன் ஜனவரி 11ம் தேதி முதலே விடுமுறை துவங்கி விடும். கிட்டதட்ட ஒரு வாரம் முழுவதும் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் ஜனவரி 10ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக செப்டம்பர் 12ம் தேதியான இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.


இதனால் பலரும் ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமையே சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி, டிக்கெட் முன்பதிவுக்கு தயாராக இருந்தனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே டிக்கெட் முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றனர். இதனால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 


ஜனவரி 11ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 13ம் தேதியான நாளை நடைபெற உள்ளது. அதிலும் இதே நிலை இருந்தால் என்ன செய்வது என தெரியாமல் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எந்த நாளிலும் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், தட்கல், சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் ஆகியவற்றை நம்பி தான் ஊர்களுக்கு செல்ல பிளான் போட வேண்டிய நிலையிலேயே பயணிகள் உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்