ஓய்ந்தது கனமழை: நெல்லையில் ரயில் சேவை தொடக்கம்

Dec 20, 2023,11:25 AM IST

நெல்லை: நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை இன்று ஓய்ந்துள்ளது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில்  இருந்து ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.


வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழந்தது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் வெள்ள நீர் சூழந்ததினால் ரயில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னயாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.


கடந்த 17ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் சூழ்ந்த வெள்ள நீர் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது, ரயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த ரயிலில் பயணித்த 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மாட்டிக்கொண்டனர். அந்த  பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.  2 நாட்களுக்கு பிறகு  நேற்று தேசிய மற்றும் மாநில மீட்பு குழுவினர் அவர்களை மீட்டனர்.




ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் பஸ் மூலம் மணியாச்சி அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்செந்தூர் போன்ற பல பகுதிகளில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்ததால் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


தற்போது மழை ஓய்ந்துள்ளதால் ரயில் நிலையங்களில் இருந்த தண்ணீர் வடிய தொடங்கியதை அடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. நெல்லை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இன்று செயல்பட துவங்கின. நெல்லை சந்திப்பில் இருந்த நீரானது முழுவதுமாக வடியாத காரணத்தினால் பயணிகள்  மாற்றுப்பாதை வழியாக ரயில் நிலையம் வர வைக்கப்பட்டனர். தென்காசி. ராஜபாளையம். விருதுநகர் ரயில்கள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்