Leo rules: இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே.. வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்

Oct 14, 2023,04:24 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: லியோ படத்தின் திரையீடு தொடர்பாக அரசு விதித்துள்ள விதிமுறைகள்  திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லையே என்று விஜய் ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர்.

அதிகாலை காட்சியில் ஆரம்பித்து லியோ படத்தை தடபுடலாக கொண்டாடக் காத்திருந்த விஜய் ரசிகர்கள் தற்போது அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டதால் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி  வெளிவர உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளை பட குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது. வெளியான  3 பாடல்களுமே ஹிட்டாகியுள்ளன.

லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5-தேதி வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. விஜய் கெட்ட வார்த்தை பேசி விட்டார் என்று ஒரு குரூப் கொந்தளித்துக் கிடந்தது. இந்த நிலையில்தான் தற்போது விஜய் பட திரையீடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்ட அறிவிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் சிறப்புக் காட்சியாக காலை 4 மணி மற்றும் காலை 7 மணி என இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு படக்குழுவினர் அனுமதி  கோரப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாறாக, அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு சிறப்புக் காட்சிகளுக்குப் பதில் ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இரவு 1.30 மணிக்கு அனைத்துக் காட்சிகளும் முடிந்து விட வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரைப்பட உரிமையாளர்கள் முறையாக  பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கவும் ஆட்சித் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர மேலும் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் திரையுலகினரையும், விஜய் ரசிகர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளன. தமிழ்நாட்டில் எந்த ஒரு புதுப் பட வெளியீட்டுக்கும் இதுபோல கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத நிலையில் விஜய்க்கு மட்டும் பிறப்பிக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

ரசிகர்களும் வழக்கமான கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அதேசமயம், இந்தத் தடைகளையும் தாண்டி விஜய் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அவர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்