மகளை உட்கார வைத்து .. 51 கிலோ தக்காளி.. அசர வைத்த அனகாபள்ளி துலாபாரம்!

Jul 21, 2023,11:49 AM IST
- பூஜா

விசாகப்பட்டனம்:  தக்காளி தங்கம் கணக்கா விக்கிற நிலைமையில தங்களோட பொண்ணோட எடைக்கு சமமா தக்காளியில் துலாபாரம் கொடுத்து அசத்தி இருக்காங்க ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

நாட்டுல தக்காளிக்கான மவுசு கூடுனதுல இருந்தே, 'காய்' அப்டின்னு பல பேரால நினைக்கப்படுற இந்த 'பழம்', தள்ளுபடி, பரிசுல இருந்து திருட்டு, திருமண விரிசல், ஹைஜேக்கிங், கொலை னு ஏகப்பட்ட விஷயத்துக்காக சமீப காலமா நியூஸையும் நம்மையும் சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு. 

அந்த வரிசையில இப்போ ஆந்திரா மாநிலத்தில ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல நடத்தப்பட்ட 'தக்காளி துலாபாரம்' எல்லாரையும் ஆச்சார்யபட வெச்ச ஒரு புதுமையான சம்பவம். வருஷா வருஷம் காய்கறிகள் மற்றும் வெல்லத்தை வெச்சு துலாபாரம் செய்றத வழக்கமா கொண்ட ஜக்க அப்பா ராவ் மற்றும் மோஹினி தம்பதியினர் இந்த வருஷம் இப்போதைய சூழலுக்கு ஏத்த மாதிரி ஒரு டிவிஸ்ட கொண்டு வந்துருக்காங்க. 



ஒரு கிலோ தக்காளி சுமார் 150ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விஸ்வரூப விலையில் வெளுத்து வாங்கி மலைக்க வைத்துள்ள நிலையில், அவங்களோட பொண்ணு பவிஷ்யாவோட எடைக்கு ஈடா 51 கிலோ தக்காளியை துலாபாரம் கொடுத்திருக்காங்க. இதுக்கு ஒரு காரணம் இருக்கு. அதாவது தானமா கொடுக்கப்பட்ட இந்த தக்காளிய அன்னதானத்துல சேர்த்து இந்த சூழல்ல கூட பக்தர்கள் மனசார எந்த குறையும் இல்லாம கோயில்ல பிரசாதம் சாப்பிடனும் அப்டிங்கிறதுதான்தான் எங்களோட நோக்கம்னு சொல்றாங்க இந்த தம்பதி. 

வழக்கமா துலாபாரம் செய்ய பக்தர்கள் அனகாபள்ளியில் பிரபலமான வெல்லம், சக்கரை, அரிசி, தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை தருவார்கள். வசதியானவர்கள் என்றால் வெள்ளி நாணயம், தங்க நாணயம், நகைகள் அப்டின்னு செய்வாங்க. ஆனால் இவங்க வித்தியாசமாக தக்காளியை தானமாக கொடுத்திருக்காங்க. தினசரி அன்னதானம் நடக்கும் ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல அடுத்த கொஞ்ச நாளைக்கு தக்காளிக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.  என்ன இந்த தக்காளி அழுகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்கமாக தக்காளியை வைத்து தொக்கு செய்யலாம்.. குழம்பில் போடலாம்.. சட்னி கூட அரைச்சு இட்லியைத் தொட்டு சாப்பிடலாம்.. பட் தக்காளியை வைத்து துலாபாரம் கொடுப்பதெல்லாம்.. நிச்சயம் வேற லெவல் கிரியேட்டிவிட்டிதான்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்