ஆடி மாதத்தின் முக்கிய வழிபாடு.. வளமான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம் 2024

Aug 16, 2024,09:01 AM IST

சென்னை: ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை வரலட்சுமி விரதம் என கொண்டாடுகிறோம்.


ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் ஆண்டுகளில் மட்டும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வருவது உண்டு. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் நல்வாழ்விற்காகவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.


யாரெல்லாம் வரலட்சுமி விரதம் இருக்கலாம்?




உண்மையில் வரலட்சுமி விரதத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். வரலட்சுமி விரதம் எதற்காக இருக்கப்படுகிறது, இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் பிரபலமாக சொல்லப்படுவது, சாருமதி என்ற ஏழைப்பெண், மிகுந்த பக்தி உடையவள். தன்னுடைய கணவர், குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே வாழும் சிறந்த குணவதி. அப்படிப்பட்ட சாருமதியின் கனவில் காட்சி கொடுத்த மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகளை சொல்லிக் கொடுத்து, இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கும் படி சொல்லி உள்ளார். அவளும் அதன் படியே இருக்க, வருடத்திற்கு வருடம் அவர்களின் குடும்பத்தின் செல்வ நிலை என்பது உயர்ந்து, நிறைவான, வளமான வாழ்க்கையை வாழ்ந்தாள் என்கின்றன புராணங்கள்.


நம்பி வழிபட்டால் நலம் தருவாள் மகாலட்சுமி


வாழ்வில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையில் இருள் சூழ்ந்து, பாதை தெரியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு வரங்கள் பல தந்து, வளமான வாழ்க்கையை தருபவள் தான் வரலட்சுமி. தன்னை நம்பி வழிபடுபவர்கள் கேட்கும் வரங்களை தருக் கூடிய வரலட்சுமி, மகாலட்சுமியின் அம்சமானவள். ஒருவருக்கு தான் அளித்த செல்வத்தை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார்? யாருக்காவது தானம் செய்கிறாரா? எந்த அளவிற்கு இரக்க குணத்துடன் வாழ்கிறார் என்பதை மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்க்கும் நாளை வரலட்சுமி விரதம் ஆகும். 


வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமியை வாசலில் இருந்து, அவளுக்குரிய மந்திரங்கள், துதிகளை சொல்லி வீட்டிற்குள் அழைத்து வந்து, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நம்மால் முடிந்த எளிமையான உணவுகள் அல்லது பழங்களை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டு சாதம் படைப்பது சிறப்பானதாகும்.


லலிதா சகஸ்கரநாமம் - அபிராமி அந்தாதி படிக்கலாம்




இந்த நாளில் மகாலட்சுமி அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்பாளின் வடிவத்திற்கு பூக்கள், அக்ஷதை, குங்குமம், 108 நாணயங்கள் ஆகிய ஏதாவது ஒன்றை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அம்மனுக்குரிய லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பாடி வழிபட வேண்டும்.


சுமங்கலி பெண்கள் வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால் கணவர் ஆயுள் பலப்படும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 முதல் 07.20 மணி அல்லது காலை 9 முதல் 10.20 வரையிலான நேரத்திற்குள் மகாலட்சுமிக்கு பூஜை செய்து, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வரலட்சுமி பூஜையை செய்யலாம். ஆனால் தாலிக்கயிறு மாற்றுபவர்கள் காலை நேரத்தில் மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்