- ஸ்வர்ணலட்சுமி
மார்ச் 10ஆம் தேதி 20 25 திங்கட்கிழமை மாசி 26, அன்று ஏகாதசி திதியும் சேர்ந்து வருவது மிகச் சிறப்பானதாகும்.
நேரம் :காலை 7:48 மணி வரை ஏகாதசி திதி உள்ளது பிறகு 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 8:16 மணி வரை துவாதசி திதி உள்ளது. இன்று வரும் ஏகாதசி திதி 'ஆமலகி ஏகாதசி 'என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் வரும் ஏகாதசி தினம் ஆமலகி ஏகாதசி தினமாகும்.
அமலகி ஏகாதசி என்பது ஆம்லா என்று கூறப்படும் பெரிய நெல்லிக்கனி சம்பந்தப்பட்டதாகும் .இந்த ஆம்லா மரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏகாதசி திதி 'அமலகி ஏகாதசி 'என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு :ஏகாதசி நன்னாளில் விஷ்ணு பகவான் நெல்லிக்கனி மரத்தில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. புராணங்களில் இது தொடர்பான ஏராளமான கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவிஷ்ணுவின் திருவுருவமாக இந்த நெல்லி மரத்தை கருதப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் நெல்லிக்கனி மரத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நாள் முழுதும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் ,ஆன்மீக முன்னேற்றம் ,மன அமைதி ,பாவங்கள் நீங்கி மோட்சம் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் விரத முறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் ஹோலி பண்டிகையின் வண்ணமயமான கொண்டாட்டங்களில் தொடக்கத்தை குறிக்கிறது.
நெல்லி மரத்தை வழிபடுவது நல்ல ஆரோக்கியம் ,நீள் ஆயுள், நிறை செல்வம் கிடைக்கும் என்று பக்தர்கள் ஏகாதசி விரதம் கடை பிடிக்கின்றனர் .நெல்லி மரத்திற்கு பல காணிக்கைகளை செலுத்துவார்கள். மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதங்களை பெற பிரார்த்தனைகள் செய்கின்றனர் .நெல்லி மரத்திற்கு பூஜை செய்து கதைகள் ,கீர்த்தனைகள், பாடி வழிபாடு செய்வர்.
செவ்வாய்க்கிழமை மார்ச் 11ஆம் தேதி பிரதோஷ தினத்திற்கு முதல் நாள் துவாதசி திதியானது ஸ்ரீ சுவர்ணலட்சுமி (பொன்மகள்) தோன்றிய தினமாகும். இந்நாளில் விஷ்ணு மூர்த்திகள் தோன்றி அருளுகின்றனர். திருமகளுடன் ஸ்ரீ நரசிம்மர் தோன்றி அருளினார் என்று கூறப்படுகிறது. ஆதிலட்சுமி நரசிம்ம துவாதசியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு முழு தாமரை மலர் மாலைகளை சாற்றி பூஜிப்பது அதீத சிறப்பு .பானகம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் படைத்து அன்னதானம் செய்தல் மிகச் சிறப்பானதாகும்.
இவ்வாறு ஏகாதசி விரதமும் ,துவாதசி லட்சுமி வழிபாடு செய்யவும் ஏற்ற நாள்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}