12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 31, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 31, 2025,10:18 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 17ம் தேதி திங்கட்கிழமை

ரம்ஜான் பண்டிகை. பகல் 12.27 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 04.58 வரை அஸ்வினி நட்சத்திரம், பிறகு பரணி நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் -  உத்திரம், அஸ்தம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பதற்றம் இன்றி செயல்பட வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாளாகும்.


ரிஷபம் - உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம்.


மிதுனம் - மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். பொதுப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பாக எண்ணம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 


கடகம் - ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் ஏற்படலாம். உறவினர்களில் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உற்பத்தி துறையில் உயர்வு ஏற்படும். 


சிம்மம் - நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழிலில் முயற்சிகள் கைகூடும். தடைகள் ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தடை நிறைந்த நாள்.


கன்னி - அரசு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவுகளில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நிதானம் வேண்டிய நாளாக இருக்கும்.


துலாம் -  வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செலாவர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். பரிசு கிடைக்கும் நாளாக இருக்கும். 


விருச்சிகம் - மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்ப்புகளின் தன்மையை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து செயல்படவும். சுகமான நாள்.


தனுசு - வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமான செயல்பட்டு சேமிப்பை அதிகரிப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். லாபத்தை அதிகரிக்கும் வழிகளை அறிந்த கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள். 


மகரம் - மனதில் எண்ணிய எண்ணம் நிறைவேறும். வாகன பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆர்வமின்மை குறையும். சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். 


கும்பம் -  செயல்களில் இருந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எதிர்ப்பு குறையும். 


மீனம் - சவாலான விஷயங்களையும் சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்