தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 14 ம் தேதி புதன்கிழமை
மகாசிவராத்திரி. சுபமுகூர்த்த நாள். காலை 10.18 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது . மாலை 04.51 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.51 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சில முடிவுகள் எடுப்பதில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் - உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவு ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். அரசு வழியில் அலைச்சல்கள் ஏற்படலாம். மனதில் மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரிடம் அனுசரித்து செல்ல வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும்.
கடகம் - கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுப காரியம் எண்ணங்கள் ஈடேறும். புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். வரவுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விவசாய பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும்.
கன்னி - ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
துலாம் - நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும்.
விருச்சிகம் - திறமைகள் வெளிப்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் லாபம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் உரிய ஆலோசனை பெற்று இறங்க வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம் - எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படவும். பெரியவர்களிடம் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் படபடப்பு வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.
கும்பம் - ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். நண்பர்களுடன் விவாதங்கள் ஏற்படலாம். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்கும் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும்.
மீனம் - குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வர்த்தக பணிகளில் உயர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். இழுபறியாக இருந்த பணவரவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாளாக இருக்கும்.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}