12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Feb 24, 2025,10:52 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 12 ம் தேதி திங்கட்கிழமை

காலை 11.33 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது . மாலை 05.04 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 05.04 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 049.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  உடன் பிறந்தவர்களுடன் இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தர்ம காரியங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். மனதில் புதிய தெளிவு பிறக்கும்.


ரிஷபம் - உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழல் ஏற்படலாம். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான மனநிலையால் குழப்பம் ஏற்படலாம். எதிர்பார்த்த முடிவுகளில் மாற்றம் ஏற்படும்.


மிதுனம் - திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் அதிகரிக்கும். சுப காரிய பேச்சுக்களின் சாதகமான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். தொழிலில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


கடகம் -  வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் கிடைக்கும். தள்ளி போன விஷயங்கள் விரைவில் முடியும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆசைகள் அதிகரிக்கும்.


சிம்மம் -  உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நிதானமாக செயல்படுவதால் நன்மை ஏற்படும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


கன்னி -  பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். நினைத்த சில காரியங்களை முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பணி தொடர்பான முயற்சிகள் கை கூடும். சுகம் நிறைந்த நாளாக இருக்கும்.


துலாம் - விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரியம் நடைபெறும். சிறு தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கு ஏற்ற வரவுகள் கிடைக்கும். சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணை வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். 


விருச்சிகம் - எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படும். சிந்தனை போக்கியில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பேச்சுவன்மையால் லாபங்கள் அதிகரிக்கும். பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.


தனுசு - நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பாக சில முடிவுகளை எடுப்பீர்கள். விற்பனை துறையில் பொறுமையை கையாள வேண்டும். வரவு நிறைந்த நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். 


மகரம் -  திட்டமிட்ட பணிகளில் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -   வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உடன் இருப்பவர்களின் உதவியால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதிய குறிக்கோள்கள் பிறக்கும். பணிகளில் இருந்த இழுபறி நீங்குள். ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும்.


மீனம் - உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும். போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்