தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 08 ம் தேதி வியாழக்கிழமை
தேய்பிறை அஷ்டமி. காலை 08.03 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி உள்ளது . காலை 11.46 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் மூலம் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
ரிஷபம் - திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். நன்மைகள் நிறைந்த நாள்.
மிதுனம் - வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில நன்மைகள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை வகுப்பீர்கள். உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். வீடு, மனை தொடர்பாக லாபம் ஏற்படும். வரவு அதிகரிக்கும்.
கடகம் - குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மனதில் இருந்த தயக்கங்கள் நீங்கும். உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். தம்பதிகளுக்கும் புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். கற்பனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் துவங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம் - அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கும்.
கன்னி - வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் திறமைகள் வெளிப்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கை கூடும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். உறவுகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டிய நாள்.
துலாம் - சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்ததத் தன்மை காணப்படும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். பதற்றத்தை குறைக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.
விருச்சிகம் - உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியான சூழல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சொத்துக்களை மாற்றுவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். ஊடக துறையில் புதிய அனுபவம் ஏற்படும். பலவிதமான சிந்தனைகளால் சோர்வு ஏற்படும்.
தனுசு - குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வீண் விடாதங்களை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆர்க்கப்பூர்வமான செயல்களை செய்வீர்கள்.
மகரம் - உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு நீங்கி, ஒற்றுமை பிறக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம் - வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.
மீனம் - நண்பர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாகத்திற்கான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் எண்ங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீட்டு துறைகளில் சாதகமான சூழல் காணப்படும். தாமதம் நீங்கும் நாளாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}