TNPSC குரூப்-4 .. ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. மக்களே மறந்துடாதீங்க!

Feb 27, 2024,02:05 PM IST

சென்னை: TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசி நாள் நெருங்குவதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசு பணிக்கு தேவையானவர்களை தகுந்த போட்டி தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் tnpsc தேர்வுகளை சிறந்த முறையில் நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது.




இந்த தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை செயலாளர்களிடமிருந்து காலிப் பணியிடங்கள் விவரங்கள் பெறப்பட்டு, அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறை சார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


இதைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்களின் மாற்றங்கள் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் அந்த திருத்தங்களைச் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது நடைபெற உள்ள குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர் எழுத்தர், வன காவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தான் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் மூலம் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இதில் 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2442 இளநிலை உதவியாளர் பணி இடங்களும், சுமார் 1700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்