டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.. இதை மனசுல வச்சுக்கங்க!

Jun 08, 2024,05:35 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு  நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசுத் துறையிலும் உள்ள காலிப் பணிகளிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த துறைகளுக்கான அரசு பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.


அதன்படி குரூப் 4 பிரிவில் இடம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1,705, சுருக்கெழுத்தர்  445, தனிப்பட்ட உதவியாளர், கிளார்க் 3, தனிச் செயலாளர் 4, இளநிலை நிர்வாகி 41, பால் பதிவாளர்- 15, வரவேற்பாளர் 1, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை மூத்தஉதவியாளர் 49, வனக் காப்பாளர், பாதுகாவலர் 1,177 மற்றும் இளநிலை ஆய்வாளர் 1 என மொத்தம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. 




இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. மேலும் குரூப் 4 இல் வனத்துறையில் 1,177 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். 


தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மே 27 ஆம் தேதியே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு மையத்திற்குள் நுழைவதற்குத் தேவையான முக்கியமான அட்மிட் கார்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாளத்தை நிறுவுவதற்கான ஹால் டிக்கெட், மற்றும் அரசாங்க அடையாளச் சான்று ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் சென்று விட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்