Aani Thirumanjanam: பழமையான 65 கோவில்களில் நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம்... இது தான் காரணமா?

Jul 11, 2024,06:54 PM IST

சென்னை :   தமிழகத்தில் உள்ள மிக பழமையான, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த 65 கோவில்களில் ஜூலை 12ம் தேதியான நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 


ஒரே நாளில் இத்தனை பழமையான கோவில்களிலும் கும்பாபிஷேகமா என பலரும் ஆச்சரியம் தெரிவத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒரு நல்ல காரணம் பின்னணியில் உள்ளது.




தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை தமிழகத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான தக்கோலம் கங்காதீசுவரர் கோவில், நெல்லை மாவட்டத்தில் 123 ஆண்டுகள் பழமையான அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவில், வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பழமையான் வெட்டுவானம் திரவுபதியம்மன் கோவில்,  சங்ககிரி செளந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில்,100 ஆண்டுகள் பழமையான 5 கோவில்களிலும், 90 ஆண்டுகள் பழமையான 3 கோவில்கள், 70 ஆண்டுகள் பழமையான 2 கோவில்கள், 50 ஆண்டுகள் பழமையான 15 கோவில்கள், 40 ஆண்டுகள் பழமையான 10 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.


ஜூலை 12 ம் தேதி இத்தனை கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் வெள்ளிக்கிழமை என்பதால் கிடையாதாம்.  ஜூலை 12ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த, தெய்வீக சக்தி வாய்ந்த நாளாகும். இது ஆனி மாதம் உத்திர நட்சத்திரமும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாளாகும். ஆனி மாத உத்திரத்தில் தான் சிவ பெருமானின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரூபமான ஆடல் அரச பெருமானான, சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேகம் நடத்தப்படும். நடராஜருக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்களில் ஒன்று ஆனி மாத உத்திரத்தில் நடத்தப்படுவது.


தேவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாளாக ஆனி உத்திரம் கருதப்படுவதால், தெய்வ அபிஷேகங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடுவார்கள் என்பது ஐதீகம். இதனால் அங்கு கூடுபவர்களுக்கு சிவன், முருகன், தேவர்கள் ஆகிய அனைவரின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்த நல்ல நாளில் இத்தனைக் கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்