தர்மபுரி: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகள் வரும் 20.8.2024 மற்றும் 21.8.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும் எனவும் மேலும், போட்டியில் வெல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ.2000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}