நெற்றியில் பலத்த வெட்டு.. முகம் முழுக்க வழிந்த ரத்தம்.. மருத்துவமனையில் மமதா பானர்ஜி.. என்னாச்சு??

Mar 14, 2024,09:09 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்காள  முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பலத்த வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான புகைப்படங்களை மம்தா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நெற்றியில் நடுவே பலத்த வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் படுத்திருக்கிறார் மமதா பானர்ஜி.  நெற்றியிலிருந்து மூக்கு வழியாக வாய் வரைக்கும் ரத்தம் ஒழுற்கியுள்ளது. 


மம்தா பானர்ஜி தனது வீட்டில் காயமடைந்ததாக ஒரு தகவலும், விபத்தில் சிக்கியதாக இன்னொரு தகவலும் வந்துள்ளது. மம்தா பானர்ஜி முகத்தில் பெரும் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு என்ன நடந்தது என்று அதிர்ச்சி எழுந்துள்ளது. 




எங்களது தலைவர் காயமடைந்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற உங்கள் அனைவரது பிரார்த்தனையும் தேவை என்று திரினமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காளத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் அவர் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மமதா பானர்ஜி காயமடைந்திருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்