பிளஸ்டூ தேர்வு ரிசல்ட்.. பின்னுக்குப் போன விருதுநகர்.. 97.45% தேர்ச்சியுடன் திருப்பூர் டாப்!

May 06, 2024,06:23 PM IST

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் மாநில அளவில் 97.45 விழுக்காடு பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.


கடந்த  மார்ச் 1ம் தேதி முதல்  மார்ச் 22ம் தேதி வரை +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இத்தேர்வினை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து முடிவற்றுள்ள நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 97.45% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்




திருப்பூர் - 97.45

ஈரோடு - 97.42 

சிவகங்கை - 97.42 

அரியலூர் - 97.25 

கோவை - 96.97 

விருதுநகர் - 96.64

பெரம்பலூர் - 96.44 

திருநெல்வேலி - 96.44

தூத்துக்குடி - 96.39

நாமக்கல் - 96.10

தென்காசி - 96.07 

கரூர் - 95.90 

திருச்சி - 95.74 

கன்னியாகுமரி - 95.72 

திண்டுக்கல் - 95.40 

மதுரை - 95.19 

ராமநாதபுரம் - 94.89 

செங்கல்பட்டு - 94.71 

தேனி - 94.65 

சேலம் - 94.60 

சென்னை - 94.48 

நீலகிரி - 94.27 

கடலூர் - 94.36 

புதுக்கோட்டை - 93.79 

தர்மபுரி - 93.55 

தஞ்சாவூர் - 93.46 

விழுப்புரம் - 93.17

திருவாரூர் - 93.08 

கள்ளக்குறிச்சி - 92.91 

வேலூர் - 92.53 

மயிலாடுதுறை - 92.38 

திருப்பத்தூர் - 92.34 

காஞ்சிபுரம் - 92.28 

ராணிப்பேட்டை - 92.28

கிருஷ்ணகிரி - 91.87 

திருவள்ளூர் - 91.32 

நாகை - 91.19 

திருவண்ணாமலை - 90.47 

காரைக்கால் - 87.03 

புதுச்சேரி - 93.38


வழக்கமாக விருதுநகர் மாவட்டம் டாப்பில் இருக்கும். இந்த முறை பின்னுக்குப் போயுள்ளது. வழக்கம் போல சென்னை மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. 


9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


வரும் 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற தளத்திலும் www.dge.tn.gov.in என்ற தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு சென்று மாணவர்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேலும் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்ச்சி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 


மாணவர்கள் பள்ளிகளில்  வழங்கிய தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது மட்டும் இன்றி அரசு மைய மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்