சென்னை: வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இன்னும் பனி போகலைல்ல?.. தை பொறந்தா வாழ்க்கைக்கு நல்ல வழி பிறக்கும்.. ஆனால் தை முடிஞ்சாதான் பனிக்கு டாட்டா காட்டா முடியும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டுதான் ஆகணும்.
இந்தக் குளிர் காலத்துல நம்ம வீட்ல இருக்க குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சளி, இருமல், தும்மல்னால அவதிப்படுவாங்க. அவங்களுக்கெல்லாம் வீட்டிலேயே ஈஸியா ஒரு ஹெல்த்தி ரெசிபி செஞ்சு கொடுத்து அவங்கள சாப்பிட சொல்லுங்க.. அப்படி ஒரு ஈஸியான ஹெல்த்தியான ரெசிபி தான் நான் இன்னைக்கு உங்களோட ஷேர் பண்ண போறேன்.
அது வேற ஒன்னும் இல்லங்க.. நம்ம வீட்டிலேயே அல்லது வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைக்கிற தூதுவளைய வச்சு தான் ஒரு ரெசிபி பண்ண போறோம்.. என்ன தெரியுமான.. சூப்பரான சுவையான பணியாரம்.. எப்படி பண்ணனும்னு விளக்கமா சொல்றேன் கேட்டுக்கங்க.
தேவையான பொருட்கள்
தூதுவளை - 1 கட்டு
பச்சை மிளகாய்- 2
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 (பெரியது)
ரவை - 1 கப்
இட்லி மாவு - 1கப்
கேரட் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கட்டு தூதுவளையை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் கழுவிய தூதுவளை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கப் ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஒரு கப் இட்லி மாவு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் , சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலந்து கொள்ளவும். பின் குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து மாவை பணியாரங்களாக ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறவும். அவ்வளவுதாங்க ஈஸியான ஹெல்த்தியான தூதுவளை பணியாரம் ரெடிங்க... சூடா சாப்பிட வேண்டியதுதான்!
நீங்களும் உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சு இந்தக் குளிர்கால நோய்களிலிருந்து உங்களையும் உங்க வீட்ல இருக்கிறவங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஓகே.. அடுத்து இன்னொரு ஹெல்த்தியான ரெசிபியோட மறுபடியும் வர்றேன்.. அதுவரைக்கும்.. பை!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}