- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 திருவெம்பாவை பாசுரம் 10.. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்!
திருவெம்பாவை பாசுரம் 10 :
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிவ பெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலங்களையும் கடந்து, வார்த்தைகளால் விளக்கி சொல்ல முடியாத சிறப்புடன் திகழ்கின்றன. மலர்கள் பலவும் சூடிய அவனது திருமுடி அனைத்திற்கும் மேலானதாக உள்ளது. அவன் ஒரு உருவன் கொண்டவன் கிடையாது. அன்னை பராசக்தியை தன்னுடைய உடலில் சேர்த்து இரண்டு உருவமாக அர்த்தநாரீஸ்வரனாக இருப்பவன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும் அவனது பெருமையை சொல்லி விட முடியாதவன். அவர் அடியாளர்களின் உள்ளங்களில் வசிப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவனுக்கு தொண்டு செய்யம் பெண் பிள்ளைகளே! அவனுடைய ஊர் எது, அவன் எப்படிப்பட்ட தன்மை கொண்டவன், அவனுக்கு எத்தனை பெயர்கள், அவனை எப்படி பாட வேண்டும் என்பதை முழுவதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க நம்முடைய தலைவனாகிய சிவ பெருமானை நம்மால் முடிந்த மொழிகளில் போற்றி பாடிடுவோம் வாருங்கள் பெண்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதிமுக உட்கட்சி விவகாரம்.. மகன் துரை வைகோ எம்.பியை சமாதானம் செய்யும் வைகோ!
அச்சச்சோ .. நான் கூட டெங்கு கொசுவோன்னு நினைச்சுப் பயந்துட்டேங்க!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
{{comments.comment}}