மார்கழி 19 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

Jan 02, 2025,04:38 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 19 :


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்!

மைத்தடங் கண்ணினாய்! நீயுள் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.




பொருள் : 


குத்து விளக்கு எரிய, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் போடப்பட்ட மென்மையான பஞ்சு மெத்தையில், விரிந்த கொத்தான பூ சூடிய கூந்தலை உடைய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடி, தன்னுடைய மார்பில் பலவிதமான மலர் மாலைகளை அணிந்து தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனே! நீ எங்களுடன் வாய் திறந்து பேசும். மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், அவனை ஒரு நூலிழை நேரம் கூட பிரிந்திருக்க நீ விரும்ப மாட்டாய். இது உன்னுடைய குணநலன்களுக்கு ஏற்ற தகுதியான செயல் ஆகாது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

news

ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

news

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

news

மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு

news

Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல

அதிகம் பார்க்கும் செய்திகள்