திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 - புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

Jan 15, 2024,08:04 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்

திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்

அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே

பள்ளி எழுந்தருளாயே.




பொருள் :


பூமியில் பிறக்காமல், வைகுண்டத்திலோ அல்லது பிரம்மலோகத்திலோ வாழ்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்காது. பிரம்மா, விஷ்ணு உலகத்தில் வாழ்பவர்கள். தங்களின் வினைப் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, அதிலிருந்து விடுபட முடியாது. சிவ பெருமானின் அருளை பெற வேண்டுமானால், இந்த பூமியில் பிறந்து, அவனை வணங்க வேண்டும். சிவனின் கருணையை பெறுவதற்காக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என பிரம்மாவும், திருமாலும் கூட இந்த பூமியில் வந்து பிறக்க விரும்புவார்கள். பூமியில் உள்ள அனைவரையும் ஆட்கொண்டு அருள் செய்யக் கூடியவர் திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமான் மட்டுமே. ஆகையால் எங்களுக்கு அருள் செய்ய நீ எழுந்தருள வேண்டும்.


விளக்கம் :


பூமியில் இருப்பவர்கள் வைகுண்டத்தை அடைய வேண்டும், பிரம்ம லோகத்தை அடைந்து மரணத்திற்கு பிறகும் சுகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தாங்கள் செய்த வினைகளுக்கான பலன்களை அனுபவித்து கழிக்க வேண்டும். இறைவனுடன் கலந்து மறுபிறவி இல்லாத நிலையை பெற வேண்டும் என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதனால் இந்த பூமியில் வாழும் வாழ்க்கையை வீணாக வீணடித்துக் கொண்டிருக்கிறார். சிவனை வணங்கி, பக்தி செய்வது மட்டுமே நம்முடைய வினைகள் நீங்குவதற்கான ஒரே வழி. அவர் மட்டுமே நம்முடைய பாவ-புண்ணியங்களை நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை நமக்கு தந்து அருள கூடிய ஒரே நபர் என மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

வேட்டையன் இசை வெளியீட்டு விழா .. விழாக்கோலத்தில் மூழ்கிய ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்

news

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கி.. பெங்களூரில் கைதான.. ஜானி மாஸ்டருக்கு 15 நாள் சிறை!

news

தமிழ்நாடு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உதவித் தொகை இருமடங்காக உயர்வு!

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்