சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகவும், அரசு ஒத்துழைப்பு தராவிட்டால் தியேட்டர்களை மூட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள்.
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தியேட்டர்களை மூடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:
- ஓடிடியில் படம் வெளியாகி 8 வாரம் கழித்து தான் வெளியிட வேண்டும். தற்போது 2 வாரங்களிலேயே படம் வெளயாகி விடுவதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
- உள்ளூர் பொழுதுபோக்கு 8% வரியை நீக்க வேண்டும். இந்த வரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை.
- திரையரங்க பராமரிப்பு கட்டணத்தை (maintenance) உயர்த்த வேண்டும். ஏ சி தியேட்டர் ரூ. 10, non AC தியேட்டர் ரூ. 5 என நிர்ணயம் செய்ய வேண்டும்.
- திரைப்படங்களுக்காண share தொகைத் தற்போது அதிகமாக உள்ளது. எனவே வரும் 1ம் தேதிக்கு மேல் 60% சதவீதம் அதிகமாக கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளோம்.
- கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளையும் திரையிட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இப்படித்தான் கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஓடிடி வெளியீட்டுக் காலத்தை அதிகரிக்காவிட்டால் கேரளாவில் மலையாளப் படங்களை திரையிட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
{{comments.comment}}