சென்னை: தொழிலதிபர் கௌதம் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை, அவரது நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதிமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதி நிலை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைத்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம் இன்றைக்குத் தமிழ்நாடு மின் சார வாரியத்தை தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர் அவர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல. ஒவ்வொரு மாநிலமும் ஆண்டு தோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களை போல தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, தமிழக அரசு அமைந்த பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடன் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், மத்திய அரசால் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் இலக்குகளை அடைவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகும். இதில், எவ்வித முறை கேடும், விதிமுறை மீறல்களும் இல்லை. இது போன்ற அடிப்படை தகவல்களை கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், மத்திய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தை பெறுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதலமைச்சர் சந்தித்ததாக கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை கொண்டு சென்று தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து உச்சநீதிமன்ற உத்தரவை அறியாதவர்கள் போல் அதிமுக அரசின் மின் கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிர்க்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்கு தான் அதிமுக பாஜக கூட்டணி திரை மறைவில் ஒளிந்து கிடக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இணக்கமாக செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், அவரை சந்தித்தார், இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பவர்களே ஆனால் அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்
படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்
ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!
{{comments.comment}}