நீ என்னை விரும்பிய தருணத்தில்.. நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக!

Mar 24, 2025,04:32 PM IST

- தேவி


பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது

வார்த்தைகள் ஓசையின்றி   நகர்ந்து சென்றது

மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது

மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது

நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது

காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும் 

காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது

கரும் விழிகளும்

என்னை அழகு படுத்து என்று 

நச்சரிக்கத் தொடங்கியது

கிழிந்த ஆடைகளும் 

புதியது புதியது என்ற  மயக்கத்தை

கொடுக்க தொடங்கியது

வானில் பறக்கும் என்னை 

இசைக்கத் தொடங்கியது 

கால் கொலுசின் முத்து மணிகள் .....

உதட்டின் ஓரம் 




என்னைத் தொட்டு வை என்று 

கருமை பொட்டும்

கொஞ்ச ஆரம்பித்தது......

நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு 

கண்களை மூடிக்கொண்டு 

மனதினை இசைத்துக் கொண்டு 

பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது

மனதின் கனவு நிமிடங்கள் 

இத்தனை  அற்புதங்களும் 

நீ என்னை விரும்பிய தருணத்தில்

நான் உணர்ந்த  கனவுகளின் காவியமாக 

மனதினை உருக்கிய  கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்