டெல்லி: 98 வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா உலகின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது ஆகும். இந்த உயரிய விருதை வாங்குவதே ஒவ்வொரு திரைப்பட நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த விழாவில், அனோரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த விருதுக்கான பரிந்துரைகள் முன்னதாக, ஜனவரி 22 ஆம் தேதி தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
{{comments.comment}}