மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

Jan 25, 2024,12:39 PM IST

சிங்கப்பூர்: சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தைப்பூச விழாவை தமிவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


தைப்பூச விழாவானது பழங்கால தொட்டு தமிழகத்தில் முருகன் சிவன் கோயில்களை கொண்டாடப்பட்டு வருகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிப்பகங்களில் குறிப்புகள் உள்ளன.  இந்ந நாளில் முருகனுக்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


அழகு குத்துதல், சர்க்கரை காவடி, தீபக் காவடி, பறவை காவடி, பால் காவடி, மச்ச காவடி, மயில் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி, சேவற் காவடி,  வேல் காவடி, விளக்கு காவடி என பல்வேறு வகையாக முருகனுக்கு காவடி எடுத்து தை பூச திருநாளை கொண்டாடுகின்றனர்.




சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில்  தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து விழா களை கட்டும். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நடப்பது வழக்கம். தைப்பூச நாளில் முருகன் வெள்ளி தேரில் வீதி உலா வருவார். காலையில் இருந்து மாலை வரை இந்த ஊர்வலம் நடக்கும். பக்தர்கள் பலவகையான காவடி எடுப்பார்கள், மற்றவர்கள் பெரும் திரளாக தேரினை இழுத்துச் செல்வார்கள். 


அழகு குத்தியும் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உண்டு. தைபூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த விழாவில் தமிழர்கள் மற்றும் இன்றி சீனர்களும் கூட முருகன் கோவில்களுக்கு வந்து வணங்கி வேண்டுதல்களை செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவில் மலேசிய தமிழர்களிடையே புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானது இந்த பத்துமலை கோவில். கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது ஒரு மலைக்கோவிலாகும். சுண்ணாம்பு பாறைகளான இந்த மலைக்கோவிலில் ஏராளமான குகைகள் இங்கு அமைந்திருக்கும். 




மலையை ஒட்டி பத்து ஆறு ஓடுகிறது. பத்து மலை முருகன் கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலை கோவிலில் குவிக்கிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவார்கள். இதற்கு 8 மணி நேரம் ஆகுமாம். 


சிலர் காவடி ஏந்தியும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருவதும் உண்டு. மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுனில் உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் பினாங்கு தைப்பூசம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பினாங்கில் தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு இங்குள்ள மாநில அரசும் பொது விடுமுறையும் அறிவிக்குமாம்.


ஈழம், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகுளிலும் முருகனுக்கு கோவில்கள் இருப்பதுடன் அங்கும் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்