சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். இதற்கிடையே தென்மேற்குப் பருவமழையும் முன்கூட்டியே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக உருவாகிறது.
இதனால் தமிழக முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரையிலும், ஒரு சில இடங்களில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பொழிவும் இருந்து வந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் வெயிலா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கனமழை:
நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}