ஹைதராபாத்: இந்தியா உலகக் கோப்பையை வென்றால், விசாகப்பட்டனம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.
இதில் இந்தியா இதுவரை 2 முறை ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலியா 5 முறை உலகக் கோப்பையை வென்ற அணியாகும். உலகக் கோப்பையை அதிகம் வென்ற அணி ஆஸ்திரேலியாதான். இந்த முறை ஆஸ்திரேலியா அணி சில தோல்விகளைச் சந்தித்து பின்னரே இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துள்ளது.
மறுபக்கம், இந்தியா தான் ஆடிய அனைத்து சுற்றுப் போட்டிகளிலும் அட்டகாசமாக வெற்றி பெற்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை பிரமாதமாக வீழ்த்திய பிறகே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் இந்தியா மட்டுமே ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத ஒரே அணியாகும்.
இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் என்பவர் கூறியுள்ள அதிரடி ஸ்டேட்மென்ட் பலரையும் நடுங்க வைத்துள்ளது. தெலுங்கில் கவர்ச்சிகரமான ரோல்களில் நடித்து வருபவர்தான் ரேகா போஜ். மாங்கல்யம், கலயச தஸ்மய் நமஹ, டாமினி வில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போட்டிருந்தார்.
அதில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால் விசாகப்பட்டனத்தில் நிர்வாணமாக வலம் வர தயாராக இருக்கிறேன் என்று கூறியிரு்நதார். இது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. பலர் இதைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் நாங்க பார்க்க ரெடி என்று குசும்பாக கூறியிருந்தனர்.
இப்படித்தான் 2011ம் ஆண்டு பூனம் பாண்டேவும், இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறியிருந்தார். அதுவும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் தனது டிவீட் குறித்து ரேகா கூறுகையில், இந்தியா மீதான அன்பு, இந்திய அணி மீதான நம்பிக்கை காரணமாகத்தான் அப்படிக் கூறினேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இதை தவறாகப் பார்க்காதீர்கள் என்று விளக்கியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}