சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடு.. தெலுங்கானா ஹைகோர்ட் உத்தரவு!

Jan 29, 2025,10:40 AM IST

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படம் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் 4ம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியைப் பார்க்க திரளான ரசிகர் பட்டாளம் ஒன்று கூடினர். அப்போது பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தார். 


அப்போது அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் தேஜா காயமடைந்தார். காயமடைந்த மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில், தற்போது ராம்சரண் நடிப்பில் வெளிவந்த கேம் ரேஞ்சர் படத்திற்கு பிரீமியம் காட்சிகளும், டிக்கெட் உயர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 4 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. விசாரணைக்குப் பின்னர், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும், இரவு 11 மணிக்கு பின்னதாகவும் திரைப்பட காட்சிகளுக்கு அனுமதிக்க கூடாது என்று மாநில அரசு மற்றும் தியேட்டர் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


புஷ்பா 2 ப்ரீமியம் ஷோவின் போது பெண்ணின் மரணத்திற்கு வழி வகுத்த போதிலும், அவரது இளம் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு டிக்கெட் உயர்வு மற்றும் கூடுதல் நிகழ்ச்சிகளை அனுமதித்ததற்கு மாநில அரசை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்