250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!

Feb 15, 2023,09:41 AM IST
டெல்லி: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி விமான கொள்முதல் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.



இந்த ஒப்பந்தங்களின்படி 250 ஏர் பஸ் விமானங்களை பிரான்சிலிருந்தும், 220 போயிங் விமானங்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திலிருந்தும் வாங்கவுள்ளது. மொத்தமாக 470 பயணிகள் விமானத்தை ஏர் இந்தியா வாங்குகிறது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய விமான கொள்முதல் ஆகும்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் மத்திய அரசிடமிருந்து வாங்கியது.  அதன் பிறகு தற்போது தனது விமான சேவையை பிரமாண்டமாக்கும் வகையில் இந்த அதிரடி விமானக் கொள்முதலை ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன்  ஒரு  அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிடன் கூறுகையில், 200க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவது மிகப் பெரிய வரலாற்று மைல்கல் ஆகும்.  இதன் மூலம் அமெரிக்காவின் 44 மாநிலங்களைச் சேர்ந்த  பத்து லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறியுள்ளார் பிடன்.

இதுதவிர மேலும் 70 போயிங் விமானங்களை எதிர்காலத்தில் ஏர் இந்தியா வாங்கும் வாய்ப்பும் உள்ளது. மொத்தமாக 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இது.  ஏர் இந்தியா மிகப் பெரிய அளவில் விமானங்களை வாங்குவது குறித்து ஏர்பஸ் நிறுவனமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த விமானக் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், மத்திய  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏர்பஸ் தலைவர் கில்லாமே பாரி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

விடாமல் துரத்திய ஜடேஜா, தோனி.. கடைசி வரை போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

news

ஷவ்வால் மாத பிறை தெரிந்தது.. தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பெரு விழா.. தலைமை காஜியார் அறிவிப்பு

news

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக "செஞ்சுரி" அடித்த அஸ்வின்.. 100வது போட்டியில் ஆடுகிறார்!

news

வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!

news

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?.. 6ம் தேதி மதுரையில் சந்திப்பு என தகவல்!

news

எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சி.. மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

news

கன்னியாகுமரி நகராட்சியானது.. மேலும் 6 நகராட்சிகளும் பிறந்தன.. வெளியானது அரசாணை.. !

news

தமிழக அரசுப் பள்ளிகளில்.. தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?.. டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்!

news

பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

அதிகம் பார்க்கும் செய்திகள்