புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று வாக்குப்பதிவு காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதனை அடுத்து லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் நான்காம் தேதியும், அனைத்து மதுக் கடைகளும் மூட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக்களும் மூடப்படும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதை அடுத்து, புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அனைத்து வகையான மதுக் கடைகளும் மூட வேண்டும்.
வாக்குப்பதிவு நாளான ஜூன் நான்காம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}