சென்னை: சென்னையில் இன்று பகலில் வெப்பம் கொளுத்தினாலும், மாலையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் பகல் நேரத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அடித்த சுவடே தெரியாமல் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து விடுகிறது. நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது.
ஜூலை மாதத்தில் சராசரியாக 10 cm மழை பெய்யும். அதில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திலேயே 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மழை குறித்த மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரக்கோணத்தில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் எதிரொடியாக இன்று பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். இது தவிர கர்நாடக மாநிலம் குடகில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான கேஆர் எஸ் பகுதியிலும் கனமழை தொடரும்.
அதேபோல் வயநாடு காவிரி கபினி அணை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும். இதனால் கபினியில் இருந்து நேரடியாக மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}