Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

Nov 26, 2024,07:01 PM IST

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதிக கனமழையும், 11 மாவட்டங்களில் மிக கனமழையும், 4 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி


இன்று அதி கனமழை (ரெட் அலர்ட்): 




திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என்பதால் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


இன்று மிக கனமழை (ஆரஞ்சு): 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


இன்று கனமழை (எல்லோ அலர்ட்):


கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை அதிக கன மழை (ரெட் அலர்ட்): 


கடலூர், மயிலாடுதுறை, ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை மிக கனமழை (ஆரஞ்சு): 


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர்,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை கனமழை (எல்லோ): 


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 28ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு): 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 28ல் கன மழை (எல்லோ): 


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 29ல் கனமழை (எல்லோ):


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நம்பர் 30ஆம் தேதி கன மழை (எல்லோ):


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மூன்று மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்