சென்னை: தவெகவுடன் கூட்டணி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. அக்கட்சித் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் தவெக தலைவர் விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. தவெக சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தது பற்றி தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
நேற்று தவெக தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தல் நேரத்தில் அது பற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம்.
அதேசமயம், சமூக வலைத்தளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மதிமுக உட்கட்சி விவகாரம்: துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ!
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
Out of control இல்லை.. Out of cantact.. முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை அதிரடி பதில்!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
{{comments.comment}}