சூப்பர் நியூஸ்... பள்ளி மேலாண்மை குழுக்களில்.. 4 முன்னாள் மாணவர்களை சேர்க்க. தமிழக அரசு முடிவு!

Jul 01, 2024,11:09 AM IST
சென்னை: பள்ளி மேலாண்மை குழுக்களில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் குழுவினர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 முன்னாள் மாணவர்களையும் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது 20 பேராக உள்ள இந்தக் குழுவானது இனி 24 பேராக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் எஸ் எம் சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குழுவில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என மொத்தம் 20 பேர் கொண்ட குழுக்களாக அமைக்கப்பட்டது.



இந்த 20 பேரில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டையும், குழந்தைகளின் வளர்ச்சியையும் கண்காணிப்பதே இதன் நோக்கமாகும். முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. பின்னர் இந்த குழுகள் 2021 முதல் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான வகுப்புகளைக் கொண்ட 37, 500 அரசு பள்ளிகளில் இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து பார்வையிட வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை என்ன, தேவையான வசதிகள் என்ன என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள வேண்டும். இந்த கல்வி மேலாண் குழு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். 

அதன்படி ஜூலை  2022 முதல் 2024 மே வரை அரசுப் பள்ளிகளின் மேலாண்மை குழு கூட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வந்தன. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இந்த அரசு பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு உள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் என 20 பேர் கொண்ட குழுவில், கூடுதலாக முன்னாள் மாணவர்கள் நான்கு பேரையும் சேர்த்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி 20 பேர் கொண்ட இந்த குழுவின் எண்ணிக்கையை தற்போது 24 ஆக உயர இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்