அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்.. ராஜகண்ணப்பன் துறை.. பொன்முடிக்கு மாற்றம்

Feb 13, 2025,07:42 PM IST

சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழாத வண்ணம் திமுக தலைமை கவனமாக செயல்பட்டு வருகிறது. 




இந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான இலாகாக்கள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் துறை டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மணிப்பூரில் குடியசுத் தலைவர் ஆட்சி அமல்.. பைரன் சிங் விலகிய சில நாட்களில் நடவடிக்கை!

news

அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்.. ராஜகண்ணப்பன் துறை.. பொன்முடிக்கு மாற்றம்

news

அதிமுக ஒன்றிணைந்தால் அனைவருக்கும் வாழ்வு... இல்லையேல் தாழ்வு... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

news

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம்தான் எடப்பாடி பழனிச்சாமி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

news

தவெக ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தை.. பிரம்மாண்டமாக நடத்த.. விஜய் உத்தரவு.. ரெடியாகும் ரசிகர்கள்

news

கமல்ஹாசனுடன்.. நேற்று பி.கே.சேகர்பாபு.. இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. எம்.பி. சீட் இருக்கா?

news

அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு

news

Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!

news

Mood of the Nation Poll: 300ஐ தாண்டும் தேஜகூ.. காங்கிரஸின் கையில் நடுக்கம்.. தளதளக்கும் தாமரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்