சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை மயிலாப்பூரில் வாக்கு சேகரித்த போது மறைந்த பின்னணி பாடகர், டிஎம் சௌந்தரராஜனின் கொள்ளு பேத்தியை கையில் வாங்கிக் கொண்டு தானும் குழந்தையாகவே மாறி கொஞ்சி மகிழ்ந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசியக் கட்சிகள் தமிழகத்தை நோக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும்ஆளும் கட்சியான பாஜகவில் பல்வேறு பிரபலங்கள் இணைந்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சமீபத்தில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வாகன பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த வழியில் இருந்த பிரபல பாடகர் டிஎம்எஸ் சௌந்தரராஜன் வீட்டை கடந்த போது அவரது கொள்ளு பேத்தியான ஸ்ரேயாவை கையில் வாங்கிக் கொண்டு அந்த குழந்தையைப் போலவே அவரும் சிரித்து மகிழ்ந்தார்.
பின்னர் குழந்தையின் கையில் தாமரை மலரை கொடுத்து மகிழ்ச்சிக்கு உச்சத்திற்கே சென்றார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை தாமரை மலரை ஆட்ட அவரும் சிரித்துக் கொண்டே பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு தானும் ஒரு குழந்தையாக மாறி சிரித்தபடி வாக்கு சேகரித்த டாக்டர் தமிழிசையை கண்டு பாஜக தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். பின்னர் குழந்தையை அவரது குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு தமிழிசை தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}