மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. குளிர்ந்து போன 15 மாவட்டங்கள்!

Sep 23, 2023,02:02 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்அளது.


கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் வெப்பம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து குளிர்ச்சி நிலவி வந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை ,தேனி ,திருப்பூர் ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது.  சென்னையில் காலை முதல் வெயில் வெளுத்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. மாலைக்கு மேல் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


எப்போது வட கிழக்குப் பருவ மழை


இதற்கிடையே, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல விடை பெறப் போவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அதேசமயம், வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 3 வாரத்துக்கு மேல்தான் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மழைதான் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழையைக் கொண்டு வந்து தரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் காத்துக் கிடக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்