டெல்லி: தென் மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாநிலம் என பிரித்து தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
லோக்சபா தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் வரும் 7 கட்டங்களில் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை 4 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது தேர்தல் நடைபெறும். அதே கட்டத்தில் கர்நாடகத்தின் 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
கர்நாடகத்தின் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமான மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறும். தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டாலும் கூட முடிவை அறிய ஜூன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மொத்த இந்தியாவும் ஓட்டுப் போட்டு முடிக்கும் வரை தென் மாநில மக்கள் அமைதி காத்திருக்க வேண்டியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}