சென்னை: தமிழ்நாட்டில் 19ம் தேதி வரைக்கும் வெயில் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்துகிறது. அட்டே மறுபடியும் சம்மர் வந்துருச்சா என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக்கிற அளவுக்கு வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் புழுக்கத்தில் உள்ளனர்.
குறிப்பாக மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தொடர்ந்து 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுக்கிறது. சென்னையிலும் கூட பகல் முழுக்க நல்ல வெயில் கொளுத்துகிறது. இதே நிலைதான் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு குட்நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது இன்னும் சில நாட்கள் இந்த வெயில் தொடருமாம். அதேசமயம், வருகிற 19, 20ம் தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார். இதுதவிர வேறு அப்டேட் எதுவும் அவர் தரவில்லை. அதேசமயம், 19, 20ம் தேதிக்குப் பிறகு வெயில் வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கால்வாய், வாய்க்கால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பான ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}