ரெக்கார்ட் பிரேக்...தமிழ்நாட்டில் சதமடித்த வெயில்...வெதர்மேன் ஆச்சரியம்

Sep 16, 2024,10:58 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதுரையை மிஞ்சும் அளவிற்கு சென்னையிலும்  வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பரவலாக மழை பெய்து வந்தது.   இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த  மழையால் வானம் மேக மூட்டத்துடன் குழுமையான சூழல் நிலவி வந்தது.அதே சமயத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 




இதற்கிடையே  தமிழகத்தில்  மழையின் அளவு படிப்படியாக குறைந்து தற்போது கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் எட்டு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.7 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. 


கோடைக்காலம் மீண்டும் வந்து விட்டதா என மக்கள் அச்சப்படும் அளவுக்கு மதுரை, சென்னை திருச்சி, தஞ்சாவூர், கரூர், பாளையங்கோட்டை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. மாறாக மாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுவாகவே  புரட்டாசி மாதத்தில் காலநிலை மாற்றம் ஏற்படும். அதிலும் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை நேரங்களில் குழுமையான சூழலும் நிலவுகிறது.  இயற்கையாகவே புரட்டாசி மாதத்தில் மனிதர்களுக்கு ஜீரண சக்தி குறையும் என்பார்கள். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் தற்போது காலநிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அநேக இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். குறிப்பாக தமிழகத்தில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கத்தால்  அதிக வெப்பநிலை நிலவும் மாவட்டங்களின் ஒன்றாக மதுரை ஏற்கனவே சாதனை படைத்தது.இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாதனையை படைக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இடையே மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்