சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் 9 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று இந்த பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவுதல் ஆகும். அதன்படி தற்போது 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம் என்பது கூடுதல் செய்தியாகும்.
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியைப் பெற விரும்புவோர், இதுதொடர்பாக 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் http://tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக சொந்த வீட்டை விட்டு வெளியூர் வந்து பணியாற்றும் மகளிருக்கு இது மிகப் பெரிய உதவியாக அமையும். அரசே நடத்தும் விடுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் வேலை பார்க்கும் பெண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையலாம்.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}